Tuesday, October 9, 2012

அந்த நிமிடம்




சுவாசத்தை உள்நோக்கி கவனிக்க
சுகமாக பயணிக்கும் சிந்தனைகள்
சுத்தமாய் சத்தமில்லாமல் துடிக்கும் இதயம்
நதிநீராய் தவழும் உதிரணுக்கள்
முடிச்சுக்கள் மெல்ல அவிழ

மகிழ்ச்சி மொட்டுகள் வெடித்து பிரபஞ்சம் நிறைக்க
உள்ளங்கையில் கடலை அடக்கி இறுமாப்பு கொள்ள
புல்நுனியில் படர்ந்த பனித்துளியில் கண்ணயற
விண்நோக்கி சிறகுகள் விரித்து பறக்கிறேன்.

விரித்த சிறகிற்குள் நியாபக இறகுகள்
விரிவாக காட்சியளிக்க,அத்துனையும்
அசைபோட்டு ஆணவம் தொலைக்கிறேன்

கடந்த நொடியின் வீச்சம் மனதை அடைக்க
தயங்கியே முடிக்கிறேன் பயணத்தை.
அந்த நொடியில் எல்லாம் அடைந்தும்
ஏதுமில்லாதவளாய் இலகுவாகிறது மனம்
     
 

9 comments:

  1. அருமையான கவிதை...
    அழகான வரிகள்...
    வாழ்த்துக்கள் கவிதாயினி...

    ReplyDelete
    Replies
    1. குமார் அண்ணா.....உங்களது கருத்து என்றுமே எனது எழுத்துக்களை ஊக்குவிக்கின்றன....நன்றிகள் பல....


      Delete
  2. அருமை அருமை
    படிப்பவர்களும் நிச்சயம் அந்த உணர்வை
    அனுபவிக்கும்படி சொல்லிப்போனவிதம்
    உள்ளம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க......நான் எதிர்பார்க்கவேயில்லை படிப்பீங்கனு.....எனக்காக கிறுக்கிய வரிகளை இரசித்தமைக்கு நன்றிகள்

      Delete
  3. அருமையான கவிதை.
    அழகா எழுதியிருக்கீங்க.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. அருமை வரிகள்... பாராட்டுக்கள்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Follower ஆகி விட்டேன்… தொடர்கிறேன்...

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    நேரம் கிடைத்தால்... மின்சாரம் இருந்தால்... என் தளம் வாங்க... நன்றி…

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க லின்க் குடுத்தற்கு.......
      வலைச்சரத்திற்கும் எனது நன்றிகள்
      இங்க மின்சாரம் போகாதுங்க.....நேரன் நிரையவே இருக்கு....கண்டிப்பா வரேன் உங்க வலைச்சரத்திற்கு

      Delete
  5. குமார் அண்ணா.....உங்களது கருத்து என்றுமே எனது எழுத்துக்களை ஊக்குவிக்கின்றன....நன்றிகள் பல....

    ReplyDelete