நண்பர்களின் கவிநடையில் மனம் லயிக்க
நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை எழ
புலியை பார்த்து சூடு போட்ட பூனை
நிலை ஆகிடுமோ என்ற பயமும் எழ
பயத்தினை ஆசை வெல்ல
இதோ உங்கள் முன் நான்
பெண்ணின் மனம்
மங்கையவள் மனதை புண்படுத்தினால்
என புலம்பும் மன்னவனே.
மங்கையின் மனதினை புண்படுத்திய
நின் செயல் அறியாயோ.
தொட்டால் சிணுங்கி இவள் என தெரிந்திருந்தும்
பல முறை தொட்டு விட்டு
சிணுங்குகிறாய் என புலம்புவதால் பயனேதுமுண்டோ.
காரணம் கேட்கிறாயே,
அது கூட புரிந்து கொள்ள முடியாத அளவிலா
உன் பிரியம்.
காரணம் அறிந்து,முரண்பாடுகள் களைந்து நீ வீசும்
ஒளியின் விடியலுக்காய்
காத்திருக்கும் மங்கையின் மனம் அறியாயோ...
நாமும் எழுத வேண்டும் என்ற ஆசை எழ
புலியை பார்த்து சூடு போட்ட பூனை
நிலை ஆகிடுமோ என்ற பயமும் எழ
பயத்தினை ஆசை வெல்ல
இதோ உங்கள் முன் நான்
பெண்ணின் மனம்
மங்கையவள் மனதை புண்படுத்தினால்
என புலம்பும் மன்னவனே.
மங்கையின் மனதினை புண்படுத்திய
நின் செயல் அறியாயோ.
தொட்டால் சிணுங்கி இவள் என தெரிந்திருந்தும்
பல முறை தொட்டு விட்டு
சிணுங்குகிறாய் என புலம்புவதால் பயனேதுமுண்டோ.
காரணம் கேட்கிறாயே,
அது கூட புரிந்து கொள்ள முடியாத அளவிலா
உன் பிரியம்.
காரணம் அறிந்து,முரண்பாடுகள் களைந்து நீ வீசும்
ஒளியின் விடியலுக்காய்
காத்திருக்கும் மங்கையின் மனம் அறியாயோ...
No comments:
Post a Comment