Sunday, August 26, 2012

வாழ்க்கைத் தண்டவாளம்


நம் அன்புக் கூட்டுக்குள்ளே
திகட்ட திகட்ட தேனருந்திய பின்
அரவணைக்கும் உன்கரங்களுக்குள்
தஞ்சமாகிறேன் குழந்தைபோல
உன் கரிசனத்தில் கரைந்து
உன் அன்பினில் ஆழ்ந்து
உன் அணைப்பில் மலர்ந்து
உன் கோபத்தில் கருகி
காற்றின் திசைகேற்ப
திரும்பும் இறகாய்
உன் உணர்ச்சிகளுக்குகேற்ப
உடை பூண்கிறது உள்ளம்

தடுமாறும் தருணங்களில்
தாங்கிப் பிடித்து தடம்
வகுத்து வழிநடத்துகிறாய்
 
ஆர்வத்தினால் அதிவேகமாய் சென்று
அடிபட்டு விழும் நேரங்களில்
கவசம் போல் காக்கிறாய்
சிறு கீறல் கூட விழாமல்

என்னுடனான உன் பயணம்
கஷ்டமெனும் போதினிலும்
இஷ்டமாக இணைகிறாய்
வாழ்க்கைத் தண்டவாளத்தில்
 

No comments:

Post a Comment