Tuesday, August 7, 2012

வழிகாட்டுவாயென............


உருகி உருகி உயிர் உருக உருக
வாசிக்கிறேன் உனக்கான பாசுரங்களை,
உன் இதயத்தில் நுழைந்து தன்னிடத்தை
அடைந்ததா என அறியாமலேயா ?
கசியும் பாசுரங்கள் நிரப்புகிறது
உன்னைக் கொண்டு என்னுள்ளான
வெற்றிடத்தை குறையேயில்லாமல்.

அந்தி நேரத்தில் கூடு தேடி ஓடும் பறவையாய்,
என் இதயமோ உன்னைத் தேடியே வருகிறது.
உன் வெற்றுப் பார்வை அம்புபட்டு இரத்தம்
கசிய வீழ்கின்றது உன் காலடியில்.

கோபத்திற்கான காரணமும் புரியவில்லை
கோபம் போக்கும் வழியும் புலப்படவில்லை.
உன் கைப்பிடித்தே வாழப் பழகியதால்
இதற்கும் உன்னையே எதிர்பார்க்கிறேன்
வழிகாட்டுவாயென............
..........................

No comments:

Post a Comment