Sunday, June 1, 2014

மழைத்துளிகள்

பெரும் மழையை சுமந்து வருகிறது
கருமேகம் என் திசை நோக்கி
சிறுதுளியில் நனைய துடித்தது
பெரும் மழைக்கு பயந்து
பின்வாங்குகிறது மனம்....

இருவருக்குமான போட்டியில்
வேகமாக முன்னேறி தஞ்சம்
புகுகிறேன் ஓர் கூரைக்குள்

மழை ஓய்ந்தபின் மெதுவாய்
தலைகாட்டுகிறேன் சாதித்த
நிம்மதியில்......................

இலைகளில் மறைந்திருந்து
என்மேல் பொழிந்துவிட்டு
முற்றிலும் நனைத்துவிட்டு
நகைத்தன வெற்றிக்களிப்பில்
மழைத்துளிகள்......................