வானவில் போல ஆயுள்
சில நிமிடங்களேயானாலும்
மனதில் நீங்கா நினைவுகளை
பதியமிட்டே செல்கிறார்கள்
சில மனிதர்கள்
.......
----------------------------------------------------------------------------------------------------
வாடாத மலர்களைச்
சுமந்து கொண்டு
வாடிய மலராய்
பூக்காரி....
------------------------------------------------------------------------------------------------------
சில நிமிடங்களை மனம்
பூட்டி வைத்துக் கொள்கிறது
அழகிய நினைவுகளாக
-----------------------------------------------------------------------------------------------------
மனம் அடங்காத குதிரையென்றிருந்தேன்
பழக்கிவிட்டால் கடிவாளமே தேவையில்லாத
அன்பான குதிரை என்று உணர்ந்தேன்
------------------------------------------------------------------------------------------------------
ஒத்திவைப்பு தீர்மானங்களில்
உயிர் விடுகின்றன பல செயல்கள்
---------------------------------------------------------------------------------------------------------------
கரைந்து காணாமல் போகிறோம்
அன்பெனும் காற்றில் கற்பூரத்தை போல
---------------------------------------------------------------------------------------------
மனதை புண்படுத்தவென்றே
நம்மை நோக்கி எறியப்படும்
வார்த்தைகளை தூக்கி எறியுமுன்
இரண்டு சொட்டு கண்ணீரையாவது
தனதாக்கி கொண்டே அகலுகிறது
-------------------------------------------------------------------------------------------------------
உண்டெனும் போது இல்லையென்றும்
இல்லையெனும் போது உண்டெனவும்
மனதின் ஓர் மூலையில் ஒரு எச்சரிக்கை
குரல் ஒலித்துக் கொண்டே இருக்கிறது
----------------------------------------------------------------------------------------------
எழுத்துக்களில் கரைக்கப் படும்
உணர்வுகள் உயிர்பெறுகின்றன
அதிக பாரத்தை சுமந்துகொண்டு
ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும்
--------------------------------------------------------------------------------------------------
ஒளி தரும் விளக்கின்
நிழலும் கருமை தான்
-------------------------------------------------------------------------------------------------
யாரோயென்றென்னும் போது துளிர்க்காத எதிர்பார்ப்பு
யாதுமாகி நிறையும் போது வேர் விட்டு வளர்கிறது.
--------------------------------------------------------------------------------------------------
சாதாரணமானது கூட
அதீத
அழகுடன் திகழ்கிறது அன்பெனும்
கண்ணாடி வழி காணும் போது
-------------------------------------------------------------------------------------------------
ஒரு மனிதனின் பதில்கள் பொய்யை
மட்டுமே தாங்கி வருமானால் அவனுக்கான
கேள்விகள் தற்கொலை செய்து கொள்கின்றன
அல்லது கருணைக் கொலை செய்யப்படுகின்றன.
-----------------------------------------------------------------------------------------------------
மறதியே மனிதனுக்கு
வரமாக பல நேரங்களிலும்
சாபமாக சில நேரங்களிலும்
அமைந்து விடுகிறது
------------------------------------------------------------------------------------------------------
உன் நட்பால் மட்டுமே எனைப்
புதிதாக ஜனிக்கவைக்க முடியும்
சோகத்தை,தனிமையை துரத்தி விட்டு
சந்தோஷத்தை மட்டுமே நிரப்புகிறாய்
எனைச் சுற்றி வேலி போல நிற்கிறாய்
முட்களின் கீறல்களை உனதாக்கி கொண்டு
மலரை மட்டுமே எனக்கு பரிசளிக்கிறாய்
------------------------------------------------------------------------------------------------
கடந்து வந்த பாதையில்
நம்மைக் குத்திய முட்களை
அகற்றிவிட்டாலும்,அது
விட்டுச்
சென்ற பயத்தையும், நம்பிக்கையின்மையும்
பசுமையாய் மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கிறது.
-------------------------------------------------------------------------------------------------
சில பிரச்சனைகளுக்கு
மூலகாரணமாக இருக்கிறோம்
நமக்கே தெரியாமல்....
----------------------------------------------------------------------------------------------
நிறைவேறாது என்று தெரிந்துமே
சில எதிர்பார்ப்புகள் உயிர்போடு
வலம் வருகின்றன மனதினுள்
------------------------------------------------------------------------------------------------
தனக்குத் தானே வட்டத்தையும் போட்டு
அதைத் தாண்டவும் தூண்டுகிறது
விந்தையான மனம்.
--------------------------------------------------------------------------------------------------
எதிபார்ப்புகள் இல்லாத போது
எளிதாக கடக்க முடிகிறது
எல்லாவற்றையும் உறுத்தல்களில்லாமல்.
-----------------------------------------------------------------------------------------------------
சில உறவுகளைக்
கடக்கவும் முடியாமல்
காப்பாற்றவும் தெரியாமல்
தத்தளிக்கிறோம்.
---------------------------------------------------------------------------------------------------
புத்தியின் கேள்விகளுக்கு
மனதிடமிருந்து வரும் பதில்
மெளனமாகவே இருக்கிறது
பல நேரங்களில்
--------------------------------------------------------------------------------------------------------
நாம் பிரமிக்கும் பல விஷயங்கள்
மற்றவர்களால் குப்பைகளாக
கணிக்கப்படும் போது உயிர்தெழும்
சிறிதாய் ஓர் வலி
மனதின் ஓரத்தில்
-----------------------------------------------------------------------------------------
தோள் கொடுக்க வேண்டிய நேரங்களில்
கைப்பிடியை மட்டும் தந்து விட்டு
சப்பைக் காரணங்களை தேடி அலைகிறோம்.
----------------------------------------------------------------------------------------------
நமக்கான உரிமைகள்
பறிக்கப் படும் நேரத்திலும்
சகிப்புத்தன்மை போர்வைக்குள்
சுகமாய் தூங்குகிறோம்
--------------------------------------------------------------------------------------------------