Friday, September 2, 2011

ஒற்றை ரோஜா

மெதுவாய் சிரித்தது ஒற்றை ரோஜா
மனிதர்களை எண்ணி..........
கல்லறையை அலங்கரித்தபடி.........

மெதுவாய் சிரித்தது ஒற்றை ரோஜா
இருக்கும் போது அருமை உணராமல்
இறந்த பிறகு கண்ணீர் வடிக்கும்
அவளின் மனதை எண்ணி.......

மெதுவாய் சிரித்தது ஒற்றை ரோஜா
காதல் என்ற ஒரு பக்கத்திற்காக
வாழ்க்கை என்ற புத்தகத்தை எரித்துவிட்ட
அவனின் முட்டாள்தனத்தை எண்ணி

No comments:

Post a Comment