Wednesday, December 28, 2011

மழை

இருட்டிய வானம்
இருளைப் போர்த்தி கொள்ள
என்னையும் அறியாமல்...

வேகமெடுத்த கால்களில்
வீடுசேரும் வேகம்
மழை வருமுன்

பைக்குள் குடையை
தடவியது கைகள்...!
மனமோ மழையின்
வருகையை எதிர்பார்த்தபடி...

ஒரு துளி கைகளில் பட...
சந்தோச வெள்ளம் மனமெங்கும்

மழை தூரல்கள்.....

சடசடவென மேனி நனைக்க
மனம் மத்தாப்பாய் பூரிக்க
நடை மெதுவாக....

முழுதாய் மழையில் நனைந்தபடி
நான்....!!

குடையை விரிக்க மனமில்லாமல்....

No comments:

Post a Comment