Monday, April 16, 2012

நினைவுகள்


மேகத்தை கிழிக்கும் மின்னலாய்
இதயத்தை கிழிக்கிறது
உன் நினைவுகள்...........

ஓடி ஒளிகிறேன்
ஏதும் பாதிக்காத இடத்தில்
காந்தம் இழுக்கும் இரும்பாய்
நீயிருப்பதை அறியாமல்...........

கண்ணீரெல்லாம் வற்றிப் போக
மனதின் சோகத்தை
வெளியேற்ற வறட்சி புன்னகையே
கைகொடுக்கிறது இப்பொழுதெல்லாம்........

ஒதுங்கியதாய் நினைக்கும்
நேரங்களில் தான் புரிகிறது
முன்பை விட நெருங்கியிருப்பது.............

நெருங்கியிருப்பது நெருங்காமல் இருக்க
ஆழ்கடலில் மூழ்குகிறேன்
எங்கும் நிறைந்தவனாய் என் மனதில்
நீயிருப்பதை மறந்தவளாய்........

No comments:

Post a Comment