Sunday, August 26, 2012

சமாதானம்


விலகுகிறேன் மனதளவில்
என்னையறியாமல் .............
காலங்கள் பிரித்த பொழுது
வாழத் துடித்த மனது
காலம் கைகூடி வரும் போது
சண்டிமாடாய் சதிசெய்கிறது.

கண்ணீர் மல்க மன்றாடுகிறேன்
கதவடைத்துவிட்டது செவிடன்போல்
அவிழ்கமுடியா முடிச்சாகிறது வாழ்க்கை

விளையாட்டாகவோ,வினையாகவோ
நீ செய்த சில செயல்கள்
மனதைக் காயப்படுத்தி
புண்ணாகவே இருக்கிறது இன்னமும்
 
புண்களில் வழியும் வெறுப்பினால்
கருணையேயில்லாமல் காயப்படுத்தபடுவாய்
சொல்லாமலே விடைபெறுகிறேன்
உன் முத்தங்களின் ஈரங்களோடு
நலமாயிருப்பாய் என்ற நம்பிக்கையுடன்
 

2 comments: