Wednesday, June 26, 2013

கருணை புரிய



கரைசேரயிலாது எனத் தெரிந்தும்
மூழ்காமலிருக்க இயலவில்லை

வற்றிய குளத்தில் வனாந்தரத்தில்
வறண்ட தொண்டைக்குள் சிக்கி
வார்த்தைகள் தற்கொலை செய்ய
கண்ணீரால் கருணைமனு போட்ட
காலம் இன்னும் மறக்கவில்லை.

ஒரு சொட்டிற்கான ஏக்கம் தவிர்க்க
கடலை கண்முன் நிறுத்திய
கருணை புரிய..........

மூழ்காமலிருக்க இயலவில்லை
கரை சேரும் எண்ணமுமில்லை.

3 comments:

  1. மூழ்காமலிருக்க இயலவில்லை
    கரை சேரும் எண்ணமுமில்லை.

    நல்ல கவிதை அனிதா.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அன்பின் அனிதா ராஜ் - கவிதை நன்று - சிந்தனை நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. வணக்கம்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/08/3.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete