Wednesday, October 5, 2011

சுயம் தேடல்

தனிமையை நேசிப்போம்.
மெளனத்தை இரசிப்போம்.
மனதை உற்று நோக்குவோம்.
சுயமதிப்பீடு செய்வோம்.
மனசாட்சியின் முன் நாம் குற்றவாளியாவோம்.
வக்கீலாக வாதாடாமல் தவறு எங்கே என்று ஆராய்வோம்.
ஆராய ஆராய மனசாட்சி நம்மை வழிநடத்தும்.
மனசாட்சி உயிர்ப்பாக இருந்தால் மனிதம் வாழும்.
மனிதம் வாழ உயிர்களை மதிக்கும் திறன் பெருகும்.
மற்ற உயிர்களை உற்று நோக்க இயற்கையின் சூட்சமம் புரியும்.
இயற்கையின் சூட்சமம் புரிய மொழி மறந்து போகும்.
மொழி மறக்க உணர்வுகள் ஆளப்படும்.
சந்தோஷமோ,துக்கமோ,குரோதமோ உற்று நோக்கப் படும்.
உற்று நோக்க எல்லாம் மாயை என புலப்படும்.
காரியத்தின் காரணங்கள் விளங்கும்.
காரணங்கள் விளங்க பிறப்பின் சூட்சமம் வெளிப்படும்.
பிறப்பின் சூட்சமம் வெளிப்பட கடமைகள் நமக்கு உணர்த்தப்படும்.
கடமைகள் உணர, அதன் வழிகள் தெளிவாக விளக்கப்படும்.
இயற்கையின் துணையோடும்,இறையின் அருளோடும் கடமைகள்
செவ்வனே நிறைவேற்றப்படும்.
வாழ்க்கை சுகமாகும்.

1 comment:

  1. சுயம் தேடல்...அருமை..தேடத்தொடங்கி விட்டீர்களோ?

    ReplyDelete