என்னை மிகவும் பாதித்த ஒருவரது மரணத்தை பற்றி இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.எனக்கு சிங்கபூரில் அறிமுகமான முதல் நபர் ”நர்மதா”.
எப்பொழுதும் சுறுசுறுப்பாகவும்,முகம் நிறைய புன்னகையுடன் வலம் வரும் அவரை பார்த்து பலமுறை அதிசியத்ததுண்டு. நான் சோர்ந்து போகும் தருணங்களில் உற்சாகமான வார்த்தைகளால் ஆறுதல் கூறியவர்.
வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று உழைக்கும் அவரை கண்கள் விரிய நிறைய நாட்கள் பார்த்து வியந்து இருக்கிறேன்.
போன வருடம் டிசம்பர் மாதம் புது வீடு வாங்கிய சந்தோஷமான செய்தியை என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஊரிலுருந்து வந்த பிறகு வீட்டிற்கு வருவதாய் சொன்னேன்.தனது புது வீடு பற்றியும்,அதற்காக தான் வாங்கிய பொருட்களை பற்றியும் மகிழ்ச்சியுடன் விவரித்தார்.அவரிடம் இருந்த உற்சாகம் என்னுள்ளும் ஒட்டிக் கொண்டது.
மணிகனக்காக பேசிய பிறகு விடைப் பெற்றேன் அவரிடம்.
ஜனவரி மாதம் ஊரிலுருந்து வந்தவுடன் அவரிடம் தான் முதலில் பேசினேன்.
புது வீடு போய் 20 நாட்கள் ஆகி விட்டதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
ஜனவரி மாதம் 27 ம் தேதி காலை 10 மணி அளவில் வந்த செய்தி என்னை நிலைகுலைய செய்தது.ஆம் நர்மதா அவர்கள் இறந்து விட்டார்கள் என்ற செய்தி இடியென என் காதுகளில் விழுந்தது.ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை.பதறி அடித்து ஒடினேன்.
தூங்குவது போல் அமைதியாக இருந்தது அவரது முகம். நான் பார்த்து வியந்த பெண்மணியின் உடலை கண்களில் கண்ணீர் வழிய பார்த்தவாறு நின்று கொண்டு இருந்தேன்.
இது தான் வாழ்க்கை என்று எனக்கு புரிய வைத்த மரணம்.
எதுவும் நிரந்தரமில்லை என்ற உண்மையை உரக்க சொன்ன மரணம்
எனது கர்வங்களை உடைத்தெரிந்த மரணம்
எனக்கு வாழ்க்கை பாடம் கற்றுக் கொடுத்த “நர்மதா”அவர்களின் மரணம்
நர்மதா நீங்கள் ஞானம் பெற்ற புன்னிய நதி
ReplyDelete