Friday, October 28, 2011

மயான அமைதி

நானெனும் அகங்காரம்
உடைந்த போது

பெரியவனெனும்
பிம்பம் சிதைந்த போது

எதுவுமே எனதில்லையென
தெரிந்த போது

எதையும் ஆள முடியாதென
உணர்ந்த போது

பிரபஞ்சத்தின் சிறு புள்ளியென
தெளிந்த போது

ஆட்டுவிப்பவன் ஒருவனென
புரிந்த போது

தான் ஒன்றுமில்லையென
அறிந்த போது

மனம் போர்த்தியது
மயான அமைதியை

6 comments:

  1. கவிதை உரக்கப் பேசுகிறது!

    ReplyDelete
  2. தான் ஒன்றுமில்லையென
    அறிந்த போது

    மனம் போர்த்தியது
    மயான அமைதியை

    அருமையான வரிகள்

    ReplyDelete
  3. //மனம் போர்த்தியது
    மயான அமைதியை....//

    அதை அறியும் வரைதான் அனைத்து போராட்டமும்.

    ReplyDelete
  4. மயான அமைதி நல்லா இருக்குங்கோ அக்கா

    ReplyDelete