Friday, October 28, 2011

மாற்றங்கள்

இளமைகளில் துளிர்விடும் போராட்ட குணம்
தற்காப்பாகிறது முதுமைகளில்,

குருகுலத்தில் பெருக்கெடுத்த அறிவின் ஊற்றுகள்
வற்றிய கிணறுகளாகிறது பள்ளிகளில்,

காட்டாற்று வெள்ளமென ஆர்ப்பரிக்கும் மனம்
நதியாகிறது சுயம் தேடலில்,

எரிமலையென வெடிக்கும் கோபம் கூட
அன்பெனும் மழையாகிறது புரிதலில்,

தனதென்பதால் அமுதசுரபியாய்  வழியும் அன்பு
நீர்த்துப் போகிறது பொதுவுடமையில்,

தெரிதலில்  பொங்கும் ஆர்ப்பாட்டம்
அமைதியாகிறது அறிதலில்.

1 comment:

  1. “அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
    இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
    கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
    வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

    ReplyDelete