Wednesday, December 28, 2011

மாறிய நாதம்

எங்கிருந்தோ ஓர் நாதம்
செவி வழியே இதயம் நிரப்ப
ஒவ்வொரு அணுவும் ஆனந்த கூத்தாட

மனதின் பூரிப்பை இதழ்கள் காட்ட
மகிழ்ச்சி பூக்கள் எங்கும் பூக்க
வண்ணத்து பூச்சியானேன்.......

சுகமான நாதம் லயம் மாறி
இதயம் கிழிக்க....

வண்ணங்கள் இழ்ந்த வானவில்லானேன்

நாதத்தின் தன்மையும் மாறும் காலம் எப்போதோ??
வண்ணங்கள் கூடும் நேரம் தான் வருமோ??

மண்டியிடுகிறேன் காலத்தின் முன் கேள்விக்குறியோடு.......


1 comment:

  1. காலம் கண்டிப்பாக பதிலளிக்கும் தோழியே.....

    ReplyDelete