Saturday, October 6, 2012

ஓரங்க நாடகம்


ஒற்றை முத்தத்திற்காக நீயாடும்
நாடகங்கள் இதழ்களின் ஓரத்தில்
புன்னகையை தவழ விடுகிறது.

ஓரக் கண்ணால் ஓங்காரமாய்
இரசித்தவிட்டு காணாததாய் நகர்கிறேன்.
கோபத்தின் உச்சியில் மலைஏறி
கொடிபிடிக்கிறாய் யுத்தத்திற்காக.

முன்நெற்றியில் இதழ்களால் சமாதான
ஒப்பந்தம் போட்டு ஓடவிரட்டுகிறேன்
கோபங்களை, மெளனச்சிறையிலிருந்து
விடுதலை பெறுகின்றன வார்த்தைகள்.



No comments:

Post a Comment