Tuesday, October 9, 2012

மருட்சியில்லாமல் மனம்


தூரலில் நனைந்தபடி
தூரமாக நீயிருக்க
தூக்கம் கலைந்த குழந்தையாக
துளி கண்ணீர் விடுகிறது
மனம் உன் நிழலுக்காக
தூவிய துளிகள்
தூங்காத நெஞ்சத்தின்
தூதாக மாறியதால்
துன்பங்கள் கரைந்தோட
துள்ளிக் குதிக்கிறது மனம்.

மனதின் மொழியறிந்து
மலர்ந்து அருகில் நீ வர
மருட்சியில்லாமல் மனம்
மகிழ்ச்சியில் ஆழ்கிறது

2 comments:

  1. வார்த்தைகளில் விளையாடியிருக்கிறீர்கள்! அருமை!

    ReplyDelete