Saturday, October 6, 2012

சுவாசமே நானாவேன்


இறுக்கங்களை வெடிவைத்து தகர்த்து
சந்தோஷ துகள்களாக பறக்கவைக்கிறாய்.
நழுவிச் செல்கிறேன் கைகளிலிருந்து
இறுகப்பற்றி இணையாக இருக்கிறாய்
வறண்ட குளத்தில் மழையாக பொழிந்து
உணர்ச்சிகளுக்கு உயிரூட்டுகிறாய்.
வானவில்லாய் ஒரு நொடியில்
வர்ணஜாலங்கள் காட்டி விழிமயங்க
வைத்து கடமையென மறைந்தே போகிறாய்.

உன்னை நினைவுகளால் உயிரூட்டி
உன் வாசத்தை சுவாசித்தே
உயிர்வாழ்கிறேன் உலகினிலே.
உன் கடமைகள் கரைந்த பிறகு
சுவாசமே நானாவேன் என்ற நம்பிக்கையில்
காலத்தை கடத்திக் கொண்டிருக்கிறேன்

No comments:

Post a Comment