Thursday, November 22, 2012

பேதை மனது


 
கவிதை குளத்தில் தூண்டிலில் சிக்கும்
வார்த்தைகள் எல்லாம் உந்தன் வாசனை
பூசியே வெளி வந்து விழுகின்றன.

வார்த்தைகளின் வீச்சில் நீயே நீக்கமற
நிறைந்திருக்க தவிர்க்க முடியாமல்
தவித்தே தள்ளி நிற்கிறேன்

தள்ளி நிற்கையில் சிந்தையில் நிறைந்து
யாதுமாகி நானறியாமல் இதயத்தில்
சிம்மாசனமிட்டு ஆட்சி செய்கிறாய்.

எதிர்கட்சியாக காலம் கடத்த எத்தனிக்க
எனை வஞ்சித்து உனக்காகவே வக்காலத்து
வாங்குகிறது பேதை மனது.

1 comment:

  1. அன்பு அப்படித்தான் வக்காலத்து வாங்கும்...

    ReplyDelete