காற்றில் திசை மறந்தே பறக்கிறேன்
இலக்குகள் இல்லாமலேயே.
அனுபவங்கள் என்னும் பாடங்கள்
மெருகேற்றி உருமாற்றியது என்னை
சுமைகளை இறக்கிய பின் சுகமாக
பறக்க முடிகிறது இலகுவாய்
எனைப்படிக்கும் ஆவலில் கை நீட்டி
காத்திருக்கும் அன்பான கைகளில் தஞ்சம்புக
தேடியே பயணிக்கிறேன் தொய்வேயில்லாமல்
அருமை... உண்மை வரிகள்...
ReplyDelete