Sunday, November 25, 2012

கனவே நீதானென்பதை


மலைகளின் முகடுகளில் தடம் பதித்து
விலகும் முகில்களாக கணநேரத்தில்
மறைந்து போகிறாய், நினைவுகளை
நினைவுச் சின்னமாக விட்டுவிட்டு.
 
ஒவ்வொன்றாக அசைபோட்டு
தேடுகிறேன் நூல்கண்டாக
நிறைந்திருக்கும் நினைவுகளின் நுனியை.

முதல் துளியின் பரவசத்தை மனதில்
இட்டு நிரப்புகிறது உன்னுடனான
மணித்துளிகளின் தடயங்களெல்லாம்.

செல்லரித்துப்போன என் கனவுகளை
நினைவாக்க, எனைப்பிரிந்த நீ,
எப்போது உணர்வாய் இப்பொழுது
என் கனவே நீதானென்பதை......

1 comment: