Monday, January 30, 2012

தாயுமானவன்


கடலில் கரைகாணாது தவித்தவளுக்கு
கலங்கரை விளக்காய் இருப்பவனே……

விதையாய் இருந்த என்னை
மரமாக்கி வேராய் தாங்குபவனே……..

எல்லா முயற்ச்சிகளுக்கும் நம்பிக்கை
நீரூற்றி வளர்ப்பவனே…………………………………………

புள்ளிகள் வைத்து வழிகாட்டி
கோலமிடும் அழகை இரசிப்பவனே…….

நல்ல எண்ணங்களை விதைத்து
அடைகாக்கும் பண்பாளனே……….

சுகமோ,துக்கமோ தோள் கொடுத்து
ஆறுதல் மொழி கூறுபவனே……….

சுகமான சுமையாக மனதுள் கருவாய்
எனைச் சுமக்கும் தாயுமானவனே……

ஒற்றைக் கண் அசைவில் மனம்
உணரும் மர்மம் புரிந்தவனே……….

முட்களாய் கீறினாலும்
மலரை மட்டும் இரசிப்பவனே…..

சொன்னது கடுகளவு
சொல்லாதது கடலளவு

தொடர்கதையாய் நீள்கிறது
உன்மேல் கொண்ட நேசம்

நீ காட்டும் அன்பில் நனைந்த படி
உன் விரல் பிடித்து நடக்கும் குழந்தையாய் நான்.

No comments:

Post a Comment