Sunday, January 29, 2012

காத்திருக்கிறேன்


விதையாய் புதைகிறேன்
மரமாகும் வேட்கையோடு.

மழைத்துளியாய் வீழ்கிறேன்
கடலாகும் நம்பிக்கையோடு.

மண்ணாய் படர்கிறேன்
கோட்டையாகும் கனவோடு.

காற்றாய் வீசுகிறேன்
இசையாகும் ஏக்கத்தோடு.

எழுத்துக்களாய் தவமிருக்கிறேன்
கவிதையெனும் வரமாக.

எண்ணங்களாய் வியாப்பிக்கிறேன்
சூழ்நிலையாகும் ஆவலோடு.

வர்ணங்களாய் எழுகிறேன்
ஓவியமாகும் ஆசையோடு.

கனவுகளாய் காத்திருக்கிறேன்
நினைவாகும் கனவோடு…………………………………

No comments:

Post a Comment