பிடிக்க நினைத்தால் ஓடுகிறது
அமைதியாய் இருந்தால் நர்த்தனமாடுகிறது முன்னால்.
முள்ளாய் உறுமாறினால் மலராய் பூக்கிறது.
அடக்கிவிட எத்தனிக்க காட்டாற்று வெள்ளமென சீறுகிறது
சோர்ந்து துவள்கையில் மீட்டெடுக்கும் தோழனாகிறது
வெற்றிக்களிப்பில் ஆடுகையில் பிடறிதட்டும் எதிரியாகிறதுசோகத்தில் மூழ்குகையில் கடந்து போகுமென கைகொடுக்கிறது.
சுயமெனும் முத்தெடுக்க தூண்டுகிறது.
இதுவல்ல நானென்று உணர்த்தி
ஓடவைக்கிறது எதையோ சாதிக்க
திராவகம் ஊற்றிய மனம்.
ஓடிக் களைத்து ஏதோ சாதித்த
திருப்தியில் நிமிர்கையில்
தொடங்கிய இடத்திலேயே நான்…….
அழகான மாயமான்
ReplyDelete