Sunday, November 25, 2012

என் அன்பினை



சிதைந்த கனவுகளுக்கு
சமாதிகட்டிய பிறகு
சமாதானமாகாத மனம்
சிந்துகிறது ஒற்றைத் துளி கண்ணீரை

மூடிய இமைகளுக்குள் உலாவிய
ஒற்றைக் கண்ணீர் மடை திறந்ததும்
இமைமுடிகள் நனைத்து தடையற்று
கன்னம் கடந்து காணாமல் போகிறது.

இமைமுடியின் ஈரப்பசை
மெளனமாய் பறைசாற்றுகிறது
உன்மீதான என் அன்பினை.


1 comment: