Sunday, November 25, 2012

பாராமுகமாய்


பற்றிவிட தோணவில்லை பறக்கும் போது,
கண்ணில் துளிர்த்த துளி கலக்கமும்
கரைந்தே போனதே மறைந்தவுடன்,
கனவுகளின் சிதைந்த கோலம்
காட்சியாக கண்முன் பறக்க,
மெளனமாகச் சிந்திய கண்ணீர் துளிகள்
மண்ணோடு சமாதியாகிறது சத்தமேயில்லாமல்

இருந்து விட்டுச் சென்றதன்
தடயங்களை தடவுகையில் மேலெழுந்த
உணர்ச்சியைப் பாகுபடுத்த இயலவில்லை
மகிழ்ச்சியென்றும் ,துக்கமென்றும்

திரும்பாதென்று தெரிந்த பின்னும்
சேருமிடம் அறியும் ஆவலை
அடக்க இயலவில்லை முற்றிலுமாய்.
 
பற்றியிருந்த காலங்கள் பார்த்துப் பார்த்து
பரவசமான மணித்துளிகள் பிரசவித்த
எழுத்துக்களை பாசமாய் தடவியபடி
பயணம் தொடர்கிறது பாராமுகமாய்
 

2 comments:

  1. /// திரும்பாதென்று தெரிந்த பின்னும்
    சேருமிடம் அறியும் ஆவலை
    அடக்க இயலவில்லை முற்றிலுமாய். ///

    உண்மை... (சில விசயங்களில்)

    ReplyDelete
  2. ஆஹா! அருமை..... பற்றியிருந்த காலங்கள் பார்த்துப் பார்த்து
    பரவசமான மணித்துளிகள் பிரசவித்த
    எழுத்துக்களை பாசமாய் தடவியபடி
    பயணம் தொடர்கிறது பாராமுகமாய்...(Y)

    ReplyDelete