வெள்ளை நிறம் ஒன்று இச்சைப்பட்டது
வர்ணம் பூச.......................................................
அங்கே பச்சை கிளி ஒன்று பறந்து வந்து
கொஞ்சும் மொழி பேச,
சொக்கி விட்டது அந்நிறத்தில்.
கிளி பறந்த பின் நீர்த்துவிட்டது
பச்சை நிறத்தின் மீதான தாகம்.
கண்ணில் பட்டது இம்முறை நீலவானம்
நீல வர்ணத்தில் லயித்திருக்க,
நிறமற்ற வானம் நீலமாய் தெரியும் உண்மைபுரிய
கண்கள் மூடியுது வெள்ளை நிறம்.
ஒரு நொடி வானவில்லும் வந்து மறைய
வர்ண ஜாலங்களில் மயங்கியது சில நிமிடம்.
மறைந்த வர்ணங்கள் மறந்து போக
மயக்கம் தெளிந்தது வெள்ளை நிறம்.
கடந்து போன வண்ணத்துப் பூச்சி கவனம் ஈர்க்க
கலவையான வர்ணங்கள் எண்ணம் நிறைக்க
தனித்தன்மை இல்லாதது புத்தியில் உறைக்க....
இருளுக்குள் இல்லாத நிறங்களை
ஒளி உமிழும் உண்மைபுரிய
வர்ணத்தின் மேல் கொண்ட
இச்சை விட்டது வெள்ளை நிறம்.
இதனை நம் மனதிற்கும் வாழ்க்கைக்கும் ஒப்பிட்டு பார்க்கலாம்..
ReplyDeleteபல வண்ணக் கவிதை.
ReplyDelete