Tuesday, February 14, 2012

ஒன்றோடு ஒன்று



தன் வாரிசை முதலாய் தழுவுகையில்

மெதுவாய் துளிர்க்கிறது
ஆணுக்குள் இருக்கும் பெண்மை.


ஆணின் பெண்மையை உணர்கையில்
பெண்ணின் ஆண்மை
கவசமாகிறது அவனுக்கு


நந்தவனமாய் வருகை தந்த
குழந்தையின் தீண்டல்களில்
வேர் விட்டு வளர்கிறது
ஆணின் பெண்மை


ஆலமரமாய் ஆணின் பெண்மை 

நிழல்தர தாங்கும் விழுதாய் 

பெண்ணின் ஆண்மை



இவ்விரண்டும் அழகாய்
மணம் வீசுகிறது

பிள்ளைகளின் வாரிசுகளால்.


1 comment:

  1. ஆணின் பெண்மை..வார்த்தைகள் நல்லா இருக்கு..உணர்வு பூர்வமாக...

    ReplyDelete