கரை தொடும் அலைபோல
மனமும் வருகிறது உனைநோக்கியே.
கடவுளுக்காய் பூக்கும் மலர்போல
பூக்கிறது என் வாழ்க்கை உனக்காக.
எங்கே பறந்தாலும் உன் அன்பெனும்
கயிற்றால் கட்டுண்ட காத்தாடியாய் நான்.
என் அத்துனை கோபங்களையும் கொன்று போடுகிறது
நீ உதிர்க்கும் ஒற்றைச் சொல்.
என் கோபத்திலும் அன்பின் ஆழத்தை மட்டுமே
உணரும் அன்னப்பறவை நீ
எங்கே வீழ்ந்தாலும் தாங்கும் கரமாய் நீயிருக்க
இனிதாய் தொடர்கிறது என் பயணம்.
No comments:
Post a Comment