எல்லா உயிர்களையும்
என் குழந்தைகளாய்பாவிக்கும்
வரம் கொடு
எந்தச் சூழலிலும்
இயல்பைத் தொலைக்காவரம் கொடு
மெழுகுவர்த்தியாகா விட்டாலும்
ஏற்றும் தீக்குச்சியாகவரம் கொடு
நீர்வீழ்ச்சியாகா விட்டாலும்
பாலைவனத்தில்தாகம் தணிக்கும்
நீரோடையாகும்
வரம் கொடு
சிகரம் தொடாவிட்டாலும்
முயல்பவர்களுக்குஏணியாகும்
வரம் கொடு
அச்சாணியாகா விட்டாலும்
ஓர் ஆணியாகவேனும்வரம் கொடு
வெறுப்பெனும் விஷம்
தந்தாலும் அதைஅன்பெனும் அமுதமாக்கும்
வரம் கொடு
வெறுப்பெனும் விஷம்
ReplyDeleteதந்தாலும் அதை
அன்பெனும் அமுதாக்கும்
வரம் கொடு//நல்ல வரம்..உலகில் விசம்மே இருக்காது..வரம் கொடுக்கப்பட்டது..:)