கதிரவனைக் கண்ட பனியாய்
உருகுகிறேன் உன் அம்மா
என்ற அழைப்பினில்
என் கோபங்களெல்லாம்
தற்கொலை செய்துகொள்கின்றன
உன் புன்சிரிப்பின் முன்னே
மலைகளெல்லாம்
மடுக்களாகிறது
உனக்காக என்பதனால்
மரணத்தின் முன்
மன்றாடுகிறேன்
கால அவகாசம் வேண்டி
உன் வளர்ச்சியை காண
உன் கைப்பிடித்து நடக்கும்
காலத்திற்காய் கனவுகளோடு
காத்திருக்கிறேன்
என் அத்துனை பாசத்தையும்
மிச்சமில்லாமல் உனக்குச்
சொல்ல முயற்ச்சித்து
தோற்கிறேன் ஒவ்வொருமுறையும்
வார்த்தைகளில்லாமல்
உன் கண்வழியாய்
காட்சிகள் காண
எல்லாம் அழகாய் தெரிகிறது
உன்னை நேசித்து
உனக்காய் யோசித்து
உனக்காய் சுவாசிக்க
உலகமே உன்னதமாகிறது
No comments:
Post a Comment