Sunday, February 26, 2012

செல்லக் குட்டி


கதிரவனைக் கண்ட பனியாய்
உருகுகிறேன் உன் அம்மா
என்ற அழைப்பினில்

என் கோபங்களெல்லாம்
தற்கொலை செய்துகொள்கின்றன
உன் புன்சிரிப்பின் முன்னே

மலைகளெல்லாம்
மடுக்களாகிறது
உனக்காக என்பதனால்

மரணத்தின் முன்
மன்றாடுகிறேன்
கால அவகாசம் வேண்டி
உன் வளர்ச்சியை காண

உன் கைப்பிடித்து நடக்கும்
காலத்திற்காய் கனவுகளோடு
காத்திருக்கிறேன்

என் அத்துனை பாசத்தையும்
மிச்சமில்லாமல் உனக்குச்
சொல்ல முயற்ச்சித்து
தோற்கிறேன் ஒவ்வொருமுறையும்
வார்த்தைகளில்லாமல்

உன் கண்வழியாய்
காட்சிகள் காண
எல்லாம் அழகாய் தெரிகிறது

உன்னை நேசித்து
உனக்காய் யோசித்து
உனக்காய் சுவாசிக்க
உலகமே உன்னதமாகிறது

No comments:

Post a Comment