பாதுகாக்க மகனில்லையென
ஊரார் உரைத்த போது,
அச்சனின் கழுத்தைக் கட்டியபடி
“நானிருப்பேன்” என்று தைரியம்
சொல்லமுடிந்தது பேதைப் பருவத்தில்....
உறுதுணையாய் இருக்கவேண்டுமென
உறுதி துளிர்விட்டது
மந்தணமாய் மனதினுள்...........
வாழ்க்கை நதியில் சிக்குண்டு
நிதர்சணங்கள் புரிபட
பார்வையாளனாய் நானிருக்க
நகர்கிறது வாழ்க்கை.
பெண் என்பதாலே
விழலாகும் விழுதானேனோ......
வீறு கொண்டு எழுவேனோ?
வீணாக மடிவேனோ?
வாழ்க்கையின் முன்
கேள்விக்குறியோடு நான்...........
No comments:
Post a Comment