ஏதோ ஓர் இடத்தில்
உலகமே அந்நியப்படுகிறது.
எதற்கு என்ற கேள்வியால்
முற்றுப் புள்ளியாகிறது எல்லாம்.
ஏதோ ஒன்றைத் தேடிப் போகும்
மனதின் நெடுந்தூரப் பயணத்தில்
தனிமை மட்டுமே தோள் கொடுக்க
தவிக்கிறது தனியாய் ஆன்மா.
வார்த்தைகளாலும்,எழுத்துக்களாலும்
தனிமையை ஆராய முயல
கடலில் விழுந்த சிற்றெரும்பாய்
தத்தளிக்கிறது மனது.
ஆராய ஆராய கருமேகம் போல்
இருள் சூழ்கிறது உள்ளே.........
குருடன் போல் தடவியபடியே
நடக்கிறேன் நம்பிக்கையுடன்
வெளிச்சத்தை அடையவே...
உலகமே அந்நியப்படுகிறது.
எதற்கு என்ற கேள்வியால்
முற்றுப் புள்ளியாகிறது எல்லாம்.
ஏதோ ஒன்றைத் தேடிப் போகும்
மனதின் நெடுந்தூரப் பயணத்தில்
தனிமை மட்டுமே தோள் கொடுக்க
தவிக்கிறது தனியாய் ஆன்மா.
வார்த்தைகளாலும்,எழுத்துக்க
தனிமையை ஆராய முயல
கடலில் விழுந்த சிற்றெரும்பாய்
தத்தளிக்கிறது மனது.
ஆராய ஆராய கருமேகம் போல்
இருள் சூழ்கிறது உள்ளே.........
குருடன் போல் தடவியபடியே
நடக்கிறேன் நம்பிக்கையுடன்
வெளிச்சத்தை அடையவே...
No comments:
Post a Comment