கனவுகளை கொன்று புதைத்து
கண்ணீரை மறைத்துகொண்டு
முகம்மலர வார்த்தைகளை...
சந்தோச ஈயத்தில் காய்ச்சி
ஒவ்வொன்றாய் விழச்செய்த
அந்த நொடி நினைவிருக்கிறது இன்றும்
எதுவும் செய்யமுடியாதென்ற
உண்மையை ஜீரணிக்ககூட
இயலாத, ஏதுமற்றதாய் போன
அந்த நொடி நினைவிருக்கிறது இன்றும்
வண்ணக்கனவுகளை முழுதாய்
கழுவிவிட்டு நிர்மலமான வாசலாய் நின்ற
அந்த நொடி நினைவிருக்கிறது இன்றும்.
மீண்டும் அந்த நொடியை சந்திக்க
தயார்படுத்துகிறேன் என்னை
சந்திக்கவே கூடாது என்ற பிராத்தனையுடன்
No comments:
Post a Comment