Saturday, November 16, 2013

கலையாத மேகம்





 
அரவணைப்பிற்காக ஏங்குகையில்
அருகினில் இருந்ததில்லை

கைகுலுக்க தேடுகையில்
கால்கடுக்க ஓடுகிறாய்
திரும்பியே பாராமல்

எண்ணங்களை பகிர நினைக்கையில்
எதிரிபோல் மாறிவிடுகிறாய்

நிழலெனுக்கு என்கிறாய்
நிச்சயமாய் பார்க்கவில்லை
நானுன்னை முப்பொழுதும்

கனவினில் மட்டுமே
கலையாத மேகம் நீயெனுக்கு


4 comments:

  1. ஹஹா இதெல்லாம் சொன்னா நம்மள சுயநலவாதிங்குறாங்க

    ReplyDelete
  2. ethu athu...!?

    kanaththai sonnathu vari...

    ReplyDelete