இருத்தலை உணராமல்
ஆழ்ந்திருந்தான் ஏதோஒன்றில்
நகர்தலுக்கு முரண்டுபிடித்த
மனதை இழுத்துச்சென்றது புத்தி
தடயங்களே இல்லாது...
நகர்ந்தன கால்கள் மெதுவாக
ஏதேனும் ஓர் நொடி உணரக்கூடும்
என்னாலான வெற்றிடத்தை
அந்த நொடி எங்கே தேடினாலும்
கிடைக்காத தூரத்திலோ அல்லது
திரும்பிவரயியலா ஒற்றையடிப்பாதையிலோ
வெகுதூரம் சென்றிருக்கும் எனக்கு
அவனது தேடுதலை உணர்தல்
சாத்தியமில்லாமலும் போகலாம்
ஆழ்ந்திருந்தான் ஏதோஒன்றில்
நகர்தலுக்கு முரண்டுபிடித்த
மனதை இழுத்துச்சென்றது புத்தி
தடயங்களே இல்லாது...
நகர்ந்தன கால்கள் மெதுவாக
ஏதேனும் ஓர் நொடி உணரக்கூடும்
என்னாலான வெற்றிடத்தை
அந்த நொடி எங்கே தேடினாலும்
கிடைக்காத தூரத்திலோ அல்லது
திரும்பிவரயியலா ஒற்றையடிப்பாதையிலோ
வெகுதூரம் சென்றிருக்கும் எனக்கு
அவனது தேடுதலை உணர்தல்
சாத்தியமில்லாமலும் போகலாம்
உணர முடிந்தவருக்கு உள்ளத்தில் விலகல் கிடையாது
ReplyDeleteஉள்ளத்தில் விலகல் இல்லை...ஆனால் எதார்த்த வாழ்க்கை.....
Deleteஎன்ன ஒரு கொலைவெறி உங்களுக்கு
ReplyDeleteஹஹஹா.......அமைதியா போனா கொலைவெறியா?????
Deleteஉணர்வுகள் உண்மையானால் உணர்தல் சாத்தியப்படும்.
ReplyDeleteஅன்பின் அனிதா ராஜ்
ReplyDeleteஇருத்தலை உணராமல் கவிதை அருமை
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
நன்றிங்க ஐயா
Delete