ஆவியாயிருந்து ஆன்மாவாகிறேன்
இப்பிரபஞ்சத்தில் ஓர் நாள்.
கொடுக்கப்பட்ட வாழ்க்கை புள்ளிகளில்
பலர் என் கை பிடித்து கோலம்போட
வெறும் பார்வையாளனாய் நான்..............
இயக்கத்தின் சூட்சமம் உணர்ந்தவுடன்
இயக்குபவன் நான் என்ற இறுமாப்பு
இல்லாமல் போக..........
ஏதோ ஒன்று ஆட்டுவிக்க
வெறும் பொம்மையாகிறேன்..........
ஆணிவேர் என்ற கர்வம் உடைய
பற்றும் பற்றற்று பறக்க
வாழ்க்கை புத்தகத்தில்
வெறும் வாசிப்பாளனாய் மட்டுமே நான்....
வினைகளுக்கு எதிர்வினைகளாகவே
முடிகிறது ஆயுள்...
அடுத்தமுறையேனும் நானாக வாழும்
கனவோடு ஆவியாகிறேன் மீண்டும்...........
//கொடுக்கப்பட்ட வாழ்க்கை புள்ளிகளில்
ReplyDeleteபலர் என் கை பிடித்து கோலம்போட
வெறும் பார்வையாளனாய் நான்....//அருமையான வரிகள்..