மலர்கள் மேல் ஆசைப்படு
பறிக்கத் தோன்றாது.
விலங்குகள் மேல் ஆசைப்படு
கொல்லத் தோன்றாது
துணையின் மேல் ஆசைப்படு
துன்புறுத்த தோன்றாது
குழந்தைகள் மேல் ஆசைப்படு
வன்முறை தோன்றாது.
வாழ்க்கை மேல் ஆசைப்படு
விரக்தி தோன்றாது
மனிதர்கள் மேல் ஆசைப்படு
வெறுப்பு தோன்றாது
உன்மேல் ஆசைப்படு
தன்னிரக்கம் தோன்றாது
இலட்சியங்கள் மேல் ஆசைப்படு
தடங்களே தோன்றாது
வார்த்தைகள் மேல் ஆசைப்படு
மெளனம் தோன்றாது
ஆசைகள் துறந்தவனில்லை புத்தன்
ஆசைகள் கடந்தவன்
எல்லாவற்றிக்கும் ஆசைப்படு
வாழ்க்கை அர்த்தப்படும்.
புத்தர் ஆசையை கைவிடுங்கள்...ஆசையே துன்பத்திற்கு காரணம்னு சொல்லிருக்காரே..
ReplyDelete