Sunday, February 26, 2012

வரம் கொடு


எல்லா உயிர்களையும்
என் குழந்தைகளாய்
பாவிக்கும்
வரம் கொடு


எந்தச் சூழலிலும்
இயல்பைத் தொலைக்கா
வரம் கொடு


மெழுகுவர்த்தியாகா விட்டாலும்
ஏற்றும் தீக்குச்சியாக
வரம் கொடு


நீர்வீழ்ச்சியாகா விட்டாலும்
பாலைவனத்தில்
தாகம் தணிக்கும்
நீரோடையாகும்
வரம் கொடு


சிகரம் தொடாவிட்டாலும்
முயல்பவர்களுக்கு
ஏணியாகும்
வரம் கொடு


அச்சாணியாகா விட்டாலும்
ஓர் ஆணியாகவேனும்
வரம் கொடு


வெறுப்பெனும் விஷம்
தந்தாலும் அதை
அன்பெனும் அமுதமாக்கும்
வரம் கொடு


1 comment:

  1. வெறுப்பெனும் விஷம்
    தந்தாலும் அதை
    அன்பெனும் அமுதாக்கும்
    வரம் கொடு//நல்ல வரம்..உலகில் விசம்மே இருக்காது..வரம் கொடுக்கப்பட்டது..:)

    ReplyDelete