ஆகப்பெரும் சண்டையாக
முடிந்திருந்தது வார்த்தைகளின்
உரசல்கள் முன்னறிவிப்பேயில்லாமல்
இப்படி முடியுமென்ற
சிறு சாயலுமில்லை
தொடக்கத்தில்..........
இருவருக்குமே பொதுவான களமென்பதால்
வார்த்தைகளில் உரசல்கள் சிறிது
மூர்க்கமாகவே இருந்தன.
விழுந்து சிதறிய வார்த்தை
உடைத்து சிதைத்தது
நம்பிக்கை பாத்திரத்தை
உடைந்ததை ஒட்டிவைக்கவும்
தேவையாகவே இருக்கிறது
வார்த்தைகள் மூர்க்கமான அன்புடன்....
அருமை உண்மையும் கூட
ReplyDeleteநன்றிங்க கண்ணதாசன்
Deleteகவிதை அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
நன்றி குமார்
Deleteஎதார்த்தம் அக்கா... சூப்பர்
ReplyDeleteநன்றிடா காயு
Delete