Saturday, November 16, 2013

ஒற்றைவார்த்தை



இந்த ஒற்றைவார்த்தை
இத்தனை பாதிப்பை
ஏற்படுத்துமென கனவிலும்
நினைத்ததில்லை

அத்தனை வெறுப்புக்களையும்
திணித்து இவ்வார்த்தையை
உருவாக்கியிருப்பாயோ????

நுகர்ந்த ஓர் நொடியில்
கசந்துவிட்டது இதயம்.

இனி எத்தனை அன்புத்தண்ணீர்
கொட்டி கரைக்கப்போகிறாய் இக்கசப்பை.
கரையக்கூடியதுதானா இதுவென்றும்
உறுதியாய் தெரியவில்லை

2 comments: