Friday, August 26, 2011

என் தோழியின் மகனே





என் தோழியை மீளாத் துயரில் ஆழ்த்தி
காலனிடம் சென்ற பூந்தளிரே...................
ஐயிரண்டு திங்கள் மட்டுமா, ஐயிரண்டு வருடங்கள்
தயாராக இருந்தாலே,உன்னை சுமக்க..........
ஏன் அவசரப்பட்டாய் தங்கமே.......

தலைக்கருவை இழப்பதன் வலி
மரணம் வரை துணைவருமே.......
எத்தனை கனவுகள்
சுமந்திருப்பாள் மனதினில்
அத்தனையும் கானல்நீராக்கி
ஏன் பிரிந்தாய் செல்லமே.....

கண்ணீரால் உள்ளத்துயர் அவள் கரைக்க
சொந்தங்கள் செய்வதறியாது சுற்றி நிற்க
காலங்கள் பல உருண்டோட......
இன்று மற்றவர்களுக்காக அவள் புன்னகைக்க.....
துயர் உணர்ந்த நான் அவளின் கைப்பிடித்தபடி.....

No comments:

Post a Comment