Friday, August 26, 2011

வாழ்க்கை பந்தயம்

எல்லோரும் ஓடுகிறார்கள் இந்த பந்தயத்தில்

சிலர் காரில்,
சிலர் பைக்கில்,
சிலர் சைக்கிளில்,
சிலர் மாட்டுவண்டியில்,
சிலர் கால்நடையாய்

கால்நடையாய் போகிறவன் ஓடுகிறான் மாட்டுவண்டிக்காக,
மாட்டுவண்டியில் போகிறவன் ஓடுகிறான் சைக்கிளிலுக்காக,
இப்படியே தொடர்கிறது இவர்களது ஓட்டம்.

தனக்காக ஓடவில்லை இவர்கள் யாரும்
தனது தலைமுறைக்காக ஓடுகிறார்கள்.

தன்னை முந்துபவர்களை பொறாமையாய் பார்த்தவண்ணம்,
தன்னைவிட பிந்தியவனை ஏளனமாய் பார்த்தவண்ணம்,
தன்னுடன் சமமாக வருபவனிடம் சினேக பார்வை கூட வீசாமல்
தன்னை விட முந்தி விடுவானோ என்ற அச்சத்தோடு
ஓடி கொண்டே இருகிறார்கள்,
தொடக்கமும் தெரியாமல் முடிவும் தெரியாமல்.

No comments:

Post a Comment