Friday, August 26, 2011

வரமே சாபமாய்

மூச்சிரைக்க ஓடிவந்தான் மன்னன்.
அவனால் கோபித்து கொள்ள முடியவில்லை அவளை.
என்ன செய்கிறாய் நம் மகனை என்றான்.
போக்குகிறேன் அவனது பயத்தை,
மாவீரனாவான் என்றால் அவனது
துணைவி தாய்மை பூரிப்புடன்.
துவண்டு போனான் காதலன்.
உரிமை கோருவானோ
ராஜ்ஜியத்தில் என்று.
முகம் அறிந்து மனம் உணர்ந்தவள் சொன்னால்
நாட்டில் அல்ல,பாசத்தில் என்று.
கண்ணீர் விட்டான் மன்னன்
மெதுவாய் தலை கோதி,
விரல் பிடித்து சொன்னால்
தெரிந்து தானே வந்தேன் என்று.
தெளிந்த மன்னன் ஆரத்தழுவினான் மகனை.
கனத்த மனதுடன் அரண்மணை
நோக்கி சென்றான்.
மெதுவாய் மகனை அனைத்தபடி
சென்றால் எதிர் திசையில் அவள்.

No comments:

Post a Comment