Friday, August 26, 2011

இருப்பாயோ

இருப்பாயோ என்னுடன்
என் ஆருயிர் மகனே.......

என் பல் விழுந்து, முடி நரைத்து,
நடை தளர்ந்து, துவழும் காலத்தில்
ஆலம் விழுதென உடன் இருப்பாயா
இல்லை
பணம் பெரிதென வேறு தேசம் சென்று
என்னை நிலை குழைய வைப்பாயா
துணை தேடும் காலத்தில் என் சொல் கேட்பாயா?
இல்லை
இவள் தான் துணை என அறிமுகம் செய்வாயா?

நான் விரும்பும் பாதையில் என் கைப்பிடித்து செல்வாயா?
இல்லை
உன் பாதையில் என் கைப்பிடித்து அழைத்து செல்வாயா?


என்னை தோழியாய் ஏற்றுக் கொள்வாயா?
இல்லை
நண்பர்களுக்காக என்னை தனிமையில் விடுவாயா?

 
எப்படி நடந்தாலும் என் செல்ல மகனே
என் வாழ்வு என்றும் உன்னை சுற்றியே.....


No comments:

Post a Comment