Friday, August 26, 2011

நீ இல்லாததால்

கண்மூடி சாய்ந்தபடி நான்
விடியலின் சாட்சியாக கதிரவனின் ஒளிகள் என்மேல்
வீதிகளில் மனிதர்களின் ஆரவாரம்
மனம் உன் நினைவை அசை போட்டபடி
மூளையோ இன்றைய வேலைகளை பட்டியலிட்டபடி


என் தோட்டத்தில் அடிஎடுத்து வைக்கிறேன் மெதுவாக
எனக்காக பூத்த மலர்கள் புன்முறுவல் புரிய
என் இதழ்களோ மலராத மொட்டாய்

மற்றவர்கள் பேசுவது விழுகிறது காதில்
எட்டவில்லை அதன் அர்த்தங்கள் மூளைக்கு
இன்று தெரிகிறது எல்லாம் எனக்கு அந்நியமாய்

எனது பொழுது நகர்கிறது மெதுவாக
எல்லா வேலைகளையும் செய்தபடி இயந்திரதனமாய்
என் கண்கள் மட்டும் அலைபேசியை நோக்கியபடி

அலைபேசியின் நாதம் என் செல்களுக்கு புத்துணர்வு ஊட்ட
நலம் என்ற ஒரு வார்த்தை எனக்கு உயிர் ஊட்ட
உன் நினைவில் நான்
உன் வரவை எதிர்நோக்கி

No comments:

Post a Comment