Monday, February 6, 2012

தீர்ந்து போனது


விடியல் கண்ட பனித்துளியாய்
தீர்ந்து போனது
கோபம் கடைசி சுவாசத்தில்

அன்பான துணையால்
தீர்ந்து போனது
காதல் மேல் கொண்ட மோகம்

எரிமலையாய் வெடித்த வெறுப்பு கூட
தீர்ந்து போனது
அன்பெனும் மழையால்

பாறையின் கர்வமும்
தீர்ந்து போனது
வேரின் ஊடுருவலால்

மரண பயம் கூட
தீர்ந்து போனது
மரணத்தின் வாசலில்



2 comments:

  1. //அன்பான துணையால்
    தீர்ந்து போனது
    காதல் மேல் கொண்ட மோகம்// அன்பான துணையினால் காதல் மோகம் அதிகமாகும் என்று சொல்வார்களே..:)

    ReplyDelete