Friday, August 26, 2011

மகனின் முதல் ஸ்பரிசம்

 

ஒவ்வொரு செல்களிலும் சந்தோசம்
மனதில் பொங்கி இதழ்களில் வழிகிறது.
மகிழ்ச்சி மட்டுமே என்னை சுற்றி
தேடுகின்றன கண்கள் பரபரப்பாய்......
ரோஜா மலரை துணியில் சுற்றியது
போல் என் மகன்.....அம்மாவின் கைகளில்

மெதுவாய் கைகளில் ஏந்துகிறேன் பூபோல
உலகத்தின் மொத்த சந்தோசமும் கைகளில்
வந்தது போன்ற உணர்வு மனதில்.......
அவனது கைவிரல்களை தடவுகிறேன் மெல்ல
மேகத்தை தொட்ட சிலிர்ப்பு என்னுள்....

என்னுள் அணுஅணுவாய் செதுக்கப்பட்டவன்
பத்து மாதங்களின் தவம் அவன்.......
கண் விழித்து எனைப் பார்க்க
என்னையே மறந்த நிலை எனக்கு

அவன் அழுகுரலே இசையானது.....
அவன் சிரிப்பே சொர்க்கமானது.........
அவன் அசைவுகளே உலக அதிசயமானது......
அவனே என் உலகமாகிறான்.

3 comments:

  1. அழகாக கூறியுள்ளீர்கள்

    பிடித்த வரிகள்
    மெதுவாய் கைகளில் ஏந்துகிறேன் பூபோல
    உலகத்தின் மொத்த சந்தோசமும் கைகளில்
    வந்தது போன்ற உணர்வு மனதில்.......
    அவனது கைவிரல்களை தடவுகிறேன் மெல்ல
    மேகத்தை தொட்ட சிலிர்ப்பு என்னுள்....

    ReplyDelete
  2. அன்பின் அனிதா ராஜ்

    மகனின் முதல் ஸ்பரிசத்தினை தாய் தான் உணர இயலும். நல்லதொரு கவிதையில் அதனை விளக்கியமை நன்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  3. பின் தொடர்பதற்காக

    ReplyDelete