Saturday, September 1, 2012

சிறகினையசைத்து

 
சிறகுகளுக்குள் சிறைபிடிக்க நினைக்கிறேன்
காற்றாய் சுழன்றடித்து சுகமூட்டும் உன்னை
சிறகுகளை இழக்கிறேன் காற்றின்வேகத்தில்
இழந்த சிறகுகள் இமைக்கும் நேரத்தில்
கண்விட்டு அகல கலங்குகிறேன்........
 
சிறகுகளை மீட்கும் முயற்சியில் எனைத்
தோல்விகளே முத்தமிட்டுச் செல்கின்றன.
இயலாமையின் உச்சத்தில் கோபச் சிறகு
வேகமாய் வளர்ந்து எனை மூடுகிறது.....
 
மூடிய சிறகின் வெப்பத்தில் வெந்து
வெறுப்பு விதை விதைக்கிறேன்.
கசந்த நினைவுகளை தோண்டியெடுத்து
உரமாக்குகிறேன் அவ்விதைக்கு.
இராட்சஷன் போல் வளர்ந்து
உயிர்வாழ்க்கிறது என் உயிர் குடித்து.
 
தனிமை போதிமரமாய் போதனைகள்
பல கூற வேரோடு வெட்டுகிறேன்
இராட்சஷ  வெறுப்பு மரத்தை........
பாசத்தீயில் கோபச் சிறகுகள் உருகி
காணாமல் போக உயிர்த்தெழுகிறேன்
 
அன்பெனும் பல வண்ணச் சிறகுகள்
அடர்த்தியாய் முளைக்க அழகாய்
இசையமைக்கிறேன் சிறகினையசைத்து
சிறைபிடிக்கும் எண்ணம்தவிர்த்து..............

No comments:

Post a Comment